மைதா 1 கப்
நெய் 3/4 கப்
சர்க்கரை 1 1/2 கப்
தண்ணீர் 1/2 கப்
ஏலக்காய் பொடித்தது 1 டீஸ்பூன்
ஃபுட் கலர் பச்சை, ஆரஞ்சு
மைதாவை நன்கு சலித்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடு செய்து அதனுடன் சிறிது சிறிதாக மைதாவை சேர்க்கவும்.கட்டி தட்டாமல் தயிர் போன்ற பதம் வரும் வரை கிளறவும். இதனை மூன்று பங்காகப் பிரித்து ஒரு பகுதியுடன் பச்சை நிறத்தையும், மற்றொரு பகுதியுடன் ஆரஞ்சு நிறத்தையும் சேர்க்கவும்.மீதமுள்ள ஒரு பகுதியை அப்படியே வைக்கவும். சர்க்கரையுடன் தண்ணீரைச் சேர்த்து கம்பிப் பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.( கம்பிப்பாகு:ச்ர்க்கரைக் கரைசலை விரலால் எடுத்து விரலைப் பிரிக்கும் போது கம்பி போன்ற இணைப்பு விரலுக்கிடையேத் தோன்றும்.) பாகினை மூன்று பாகங்களாகப் பிரித்து பச்சை,ஆரஞ்சு மற்றும் நிறமற்ற மைதாக் கரைசலை தனித்தனியாக சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். நெய் தடவிய தட்டில் பச்சை,வெண்மை மற்றும் ஆரஞ்சு நிறக் கலவைகளை ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி, சிறிது ஆறியதும்,மெல்லிய துண்டுகள் போடவும். ஒவ்வொரு துண்டிலும் டூத் பிக் கை பச்சை நிறத்தின் பக்கம் குத்தி வைத்து பரிமாறினால் தேசியக் கொடி போன்ற தோற்றத்தைத் தரும்.வித்தியாசமானதாகவும் இருக்கும்.